தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவர் திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, புதிய வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் திண்டிவனம் சிப்காட் வளாகத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், ஏ.டி.எஸ்.பி.,தினகரன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜூ, திண்டிவனம் தாசில்தார் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் முதல்வர் வரு கையை முன்னிட்டு சிப்காட் வளாகத்தில் மேற் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரசு அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில், சுகாதாரமான குடிநீர் , தொடர் மின்சாரம், ஜெனரேட்டர் , தற்காலிக கழிவறை வசதி ஏற்படுத்துவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, திண்டிவனத்தில் 5.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டடம், 2.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலக கட்டடம் ஆகியவற்றையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.