தமிழ்நாடு மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக பதவி வகித்த செஞ்சியை சேர்ந்த ரங்கபூபதி , விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து திண்டிவனம் நகர காங்கிரஸ் தலைவர் அலுவலகத்தில் அவரது பதவி ஏற்பு விழா நடைபெற்றது. முன்னதாக திண்டிவனம் காந்தி சிலை அருகில் இருந்து மாவட்ட தலைவர் ரங்கபூபதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் முக்கிய வீதி வழியாக கட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் வடக்கு மாவட்ட தலைவராக ரங்கபூபதி பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் விநாயகம், மாநில ஒ.பி.சி அணி செயலாளர் மணி, கோவிந்தன், காங்கிரஸ் நிர்வாகிகள் மதன்குமார், பார்த்திபன், தக்ஷிணாமூர்த்தி, சத்தீஷ் பேச்சாளர் உதயாந்தன், வழக்கறிஞர் அஜீஸ், பொன்ராஜா, இளைஞர் காங்கிரஸ் கார்த்திக், ஜெய்கணேஷ் ,குமார், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.