திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் டாக்டர் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் டி.சி. முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் சட்ட ஆலோசகரும் ,உயர் நீதி மன்ற வழக்கறிஞருமான பூங்கா .பாக்யராஜ் கலந்து கொண்டு குழு காப்பீடு பதிவு செய்த பத்திரிக்கையாளர்களுக்கு குழு காப்பீடு திட்ட பதிவு பத்திரங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் எதிர்க் கால வளர்ச்சி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பொது மக்கள் முகம் சுளிக்காத வகையில் பணியாற்றுதல், வெளிப்படையான நிர்வாகத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துதல், தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு குழு காப்பீடு செய்ய நிதி உதவி அளித்து வரும் சங்கத்தின் ஆலோசகர் வழக்கறிஞர். பூங்கா பாக்யராஜூக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் சங்கத்தின் கௌரவ தலைவர் தங்கவேலப்பன், ஒருங்கிணைப்பாளர் பழனி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் சங்கர் கணேஷ் சங்க உறுப்பினர்கள் மோகன்,ரவி, வெங்கட்ராவ், சரண், சையத் ரஃபி, தாண்டவ மூர்த்தி, சண்முகம், ரவி, ஆனந்த் , அப்பு, முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்
திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் டாக்டர் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
48