கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சீனா விண்வெளியுடன் இணைத்தல் என்ற பெயரில் tiantong 1 என்ற செயற்கைக்கோளை அனுப்பி செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கைக்கோள் மூலம் செல்போனில் பேசும் வசதியை கொண்டு வர ஆய்வு செய்து வந்தது.

இந்த நிலையில் அதில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலமாக ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியம் முழுவதும் செயற்கைக் கோள்கள் வழியாக ஸ்மார்ட் ஃபோன்களில் பேச முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
செயற்கைக்கோள் மூலமாக நேரடியாக பேச முடியும் என்பதால் நெல் நடுக்கம் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் செல்போனில் தொடர்பு கொள்வது தடைபடாது என தெரிவித்துள்ளது.
செல்போன் டவர்
செல்போன் பயன்படுத்துபவர் அழைப்பை மேற்கொள்ளும் போது, ரேடியோ அலைகள் வடிவில் உள்ள சிக்னலை அந்த தொலைபேசி அருகில் உள்ள கோபுரத்திற்கு அனுப்புகிறது.
கோபுரம் பின்னர் சிக்னலைப் பெற்று, கம்பி அல்லது வயர்லெஸ் இணைப்பு மூலம் அருகிலுள்ள தரவு மையத்திற்கு அனுப்புகிறது.

தரவு மையம் சிக்னலை பகுப்பாய்வு செய்து, அது மற்றொரு செல்போன் பயனராக இருந்தாலும் சரி அல்லது லேண்ட்லைனாக இருந்தாலும் சரி, சரியான இடத்திற்குச் செல்லும்.
இதேபோல், செல்போன் பயனர் அழைப்பு அல்லது செய்தியைப் பெறும் போது, அனுப்பியவரின் தொலைபேசியிலிருந்து அருகிலுள்ள கோபுரத்திற்கு சமிக்ஞை அனுப்பப்படுகிறது. பின்னர் அது பெறுநரின் தொலைபேசிக்கு சிக்னலை அனுப்புகிறது.
சீன விஞ்ஞானி குய் வான்ஜாவோ கூறியதாவது. செல்போன் கோபுரங்களுக்குப் பதிலாக, நேரடியாக செயற்கைக்கோள்கள் வழியாக செல்போன் அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொலைத் தொடர்புத் துறையில் அடுத்தகட்ட நகர்வாகும். இது படிப்படியாக, பொதுப் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு குய் வான்ஜாவோ தெரிவித்தார்.
புயல், பூகம்பம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது, செல்போன் கோபுரங்கள்பாதிக்கப்படுவதால் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்படுகின்றன. இதனால், மீட்புப்பணிகளில் சிரமங்கள் ஏற்படுகின்றன. ஆனால், செயற்கைக்கோள் மூலம் இயற்கை பேரிடர்களின்போதும் அழைப்பை மேற்கொள்ளமுடியும். இதற்கான தொழில்நுட்பத்தை சீனா தற்போது உருவாக்கி யுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனம் செயற்கைக்கோள்கள் வழியாக அழைப்பை மேற்கொள்ளும் வசதியைக் கொண்ட மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஷாவ்மி, ஹானர், ஓப்போ ஆகிய நிறுவனங்கள் இத்தகைய வசதியைக் கொண்ட மொபைல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.