69
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், புனித பிலோமினாள் நிதியுதவி ஆரம்பப் பள்ளியில் முதல் முறையாக பாரத சாரணர் சாரணிய இயக்கத்திற்கு முன் தயாரிப்பாக மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பள்ளியில் Cubs and Bulbul இயக்கமானது தொடங்கப்பட்டது.

இந்த இயக்கத்தில் மாணவ மாணவிகள் என மொத்தம் 40 பேர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இதன் தொடக்க விழாவில் பள்ளியின் தாளாளர் அருட் சகோதரி. மார்க், தலைமை ஆசிரியை அருட் சகோதரி. மு. லில்லி இன்பவாணி, ஒலக்கூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் சித்ரா, கிருஷ்ணன், திண்டிவனம் கல்வி மாவட்டத்தின் சாரணர் சாரணிய இயக்கத்தின் செயலர் சிரேன் குமார், சமூக ஆர்வலர் ஆத்ம ராவ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருணா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணக்கர்கள் என அனைவரும் பங்கேற்று தொடக்க விழாவினை சிறப்பித்தனர்.
