விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு 15 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து மகளிருக்கான மாரத்தான் போட்டியை அகிலா பழனியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக ரெட்டணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வனஜா சண்முகம், ரெட்டணை ஊராட்சி மன்ற தலைவர் குமுதா ரமேஷ், தென் புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுவாதி பாண்டுரங்கன், மாவட்ட கவுன்சிலர் சசிகலா மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரெட்டணை பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தென்புத்தூர் கிராமத்தை அடைந்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு ரெட்டணை பேருந்து நிறுத்தத்தை வந்தடைந்தனர்..
இதில் புவனேஸ்வரி முதல் இடத்தையும், கோமதி இரண்டாம் இடத்தையும், லாவண்யா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். முதல் இடத்தைப் பிடித்த புவனேஸ்வரிக்கு வெட் கிரைண்டரும், இரண்டாவது இடத்தை பெற்ற கோமதிக்கு மிக்ஸியும், மூன்றாவது இடத்தை பெற்ற லாவண்யாவிற்கு இண்டக் ஷன் அடுப்பும் வழங்கப்பட்டது.
மூன்று பேரைத் தொடர்ந்து வந்த 10 பேருக்கு சிறப்பு பரிசாக அயன் பாக்ஸும், நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசாக டிபன் பாக்ஸ் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.