விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் மாவட்ட விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குநர் குமாரி ஆனந்தி முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலயத்தின் உதவி பேராசிரியர் சஞ்சிவிகுமார் கலந்து கொண்டு பயிர் பாதுகாப்பு குறித்து விளக்க உரை ஆற்றினார் . மேலும் விவசாயிளின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் . கூட்ட முடிவில் வேளாண் துறை மூலம் செயல் படுத்தப்படும் மாநில அரசு மற்றும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து கையேடுகளை இணை இயக்குநர் சீனிவாசன் வெளியிட அதை தமிழ்நாடு சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கடவம்பாக்கம் வி. எம். மணி பெற்று கொண்டார்.