மரக்காணத்தில் சேகரித்த அமைச்சர் மஸ்தான்
விழுப்புரம் வடக்கு மாவட்டம் பாராளுமன்ற தொகுதி மற்றும் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி சார்பில் இந்தியா கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மரக்காணத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளர் ரவிக்குமாரை அறிமுகம் செய்து வைத்து பானை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
இதில் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் துணைச் செயலாளர்கள், ஒன்றிய சேர்மேன்கள், நகராட்சி சேர்மன், தேர்தல் குழு பொறுப்பாளர்கள் மற்றும் கட்சிகளின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.