43
பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட வானூர், விக்கிரவாண்டி, செஞ்சி, விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பேரூர் செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் தலைமையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலையச்செயலாளர் அன்பழகன், பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் மாநிலச் செயலாளர் முகுந்தன் பரசுராமன், மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார் எம்எல்ஏ, ஜெயராஜ், மாவட்டத் தலைவர் புகழேந்தி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பேரூர் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.